Friday, December 21, 2012

மாத்தறை சுல்தானாகொடவில் முதலை மழை ?

மாத்தறை சுல்தானாகொட கெகில்ல பிரதேசத்தில் பாரிய மழையுடன் முதலைக் குட்டியொன்று வீழ்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் சிவப்பு மழை, இறால் மழை என்பன பெய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இத்தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த முதலைக் குட்டி கே. பியதிஸ்ஸ என்வரின் வீட்டுக் கிணற்றிற்கு அருகாமையில் வீழ்ந்துள்ளது.

இந்தக் கிராமத்திற்கு அருகாமையில் முதலைகள் வாழும் எந்தவொரு குளமோ அல்லது வேறும் நீர் நிலைகளோ கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கிராமத்திற்கு இதற்கு முன்னர் முதலைகள் வந்தததில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை இந்தியாவில் மஞ்சள் மழை பெய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com