Tuesday, December 4, 2012

ஈ.பி.டி.பியினருக்கு எதிராக வடமராட்சிகிழக்கு மக்கள் இரண்டாவது தடவையும் போராட்டம்

வடமராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியத்தின் பெயரில் ஈ.பி.டி.பி யினரால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுத்து நிறுத்தக் கோரி இரண்டாவத தடவையாகவும் வடமராட்சி உழவு இயந்திர சங்கமும் பொது மக்களுகம் நேற்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

புவிச்சரதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகத்தில் அனுமதியில்லாத இடங்களில் மணல் அகழ்வதை உடன் நிறுத்த வேண்டும். என்றும் இதுவரையில் வேதனம் வழங்கப்படாத ஊழியர்களுக்கான வேதனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து இப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தை கைவிடக் கோரி மகேஸ்வரி நிதியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அம் முயற்சிகள் பயனளிக்கவில்லை. இதேவேளை இப்போராட்டங்களுக்கு செவி சாய்க்க வேண்டும் என்றுமு; அரச அதிகாரிகளை பொது மக்கள் கோரினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com