Wednesday, December 19, 2012

நிதிசேகரிக்கவே பயங்கரவாதிகளே மனித கடத்தலை மேற்கொள்கின்றனர்

யுத்தம் இடம்பெற்றபோது இவர்கள் பயங்கரவாதத்திற்காக நிதிசேகரித்தவர்களே இலங்கையின் கரையோரமாக மனித கடத்தலில் ஈடுபட்டிருப்போர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிப்பவர்களாக உள்ளனர் என இலங்கை உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் திஸரசமரசிங்க நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அந்த உயர்மட்ட இராஜதந்திரி; மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த இராஜதந்திரி மேலும் தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்படுவோர் எவரும் எவ்விதத்திலும் துன்புறுத்தப்படவில்லை நாம் அவர்களை விசாரித்து விபரங்களை பதிந்துக்கொள்வோம். இதனை துன்புறுத்தல் எனக்கூறமுடியாது. கூறுவதையும் ஏற்க முடியாது.

ஆனால், குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற வரலாறு உள்ளவர்களையும் ஆட்கடத்தல்களை ஒழுங்கு செய்பவர்களையும் சட்டநடவடிக்கைக்காக தடுத்துவைக்கின்றோம் இதனையே எந்தவொரு நாடும் செய்யும்.

தமது நாட்டின் சட்டம் மீறிய செயற்பாடுகள் மூலம் பல உயிர்களை காவுக்கொடுக்க தயாராக உள்ளவர்களின் விபரங்களை எந்தவொரு நாடும் சேகரிக்கவே செய்யும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com