Thursday, December 6, 2012

யாழில் காணாமல் போனவர்கள் பயங்கரவாதத்- தடுப்பு பொலிஸாராலே கைது - பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் ஒன்பது பேரும் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இலங்கை நெற்றிற்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேரை பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைகளுக்காக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸாரால் இவர்களைக் கைது செய்தனர் என்றார்.

இதேவேளை இவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com