Wednesday, December 5, 2012

அம்மா வெளிநாட்டிலிருந்து அனுப்பிய காசு அவரது பிள்ளைகளுக்கே யமனாகிப் போனது!

வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் சைக்கிளோட்டி விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மோதுண்டு பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று அபராதுவ, தல்பே என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலைவிட்டு வீட்டுக்கு திரும்பிய சிறுவர்கள் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் சைக்கிளோட்டி விளையாடிகொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவி அனுப்பிய பணத்திலேயே தனது பிள்ளைகளுக்கு அவருர்களுடைய தந்தை நேற்று வாங்கிக்கொடுத்த சைக்கிளையே இருவரும் ஓடி பழகிக்கொண்டிருந்தனர்.

இதன் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் ஆறு, பதினொரு வயது நிரம்பிய சிறுவர்களே பலியாகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com