Monday, December 17, 2012

வாகன விபத்து வட்டுக்கோட்டை இளைஞர் பலி

யாழ்.அரியாலை தபால்பெட்டிச் சந்தி பகுதியில் இன்று(17.12.2012)இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற வாகன விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்க்த திவாகரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மேற்படி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது டிரக்டர் ரக வாகனம் ஒன்று மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் இதில் உயிரிழந்தவர் யாழ். மாநகரசபை ஊழியரொருவர் என முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என அரியாலை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டதுடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அரியாலை பொலிஸ்ஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com