Tuesday, December 25, 2012

பரீட்சை வினாத்தாள்கள் வெளியாமைக்காக கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும்-இ.ஆ.சங்கம்

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானது தொடர்பாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் யோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,.

கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்சைக்கான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானமை நாட்டின் கல்வியை இருட்டுக்குள் தள்ளிவிடுகின்ற செயற்பாடாகும். இதற்கு நாட்டின் கல்வியமைச்சர் முழுமையாக பொறுப்பு கூறவேண்டும்.

கல்விச்செயற்பாடுகளுக்கும் பரீட்சை முறைமைகளுக்கும் கல்வியமைச்சர் என்ற வகையில் அவரே பொறுப்பு கூறவேண்டும். எனினும் பரீட்சை வினாத்தாள்கள் வெளியானமை இது முதல் தடவையல்ல எனக்கூறி கல்வியமைச்சர் தப்பித்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றார்.

நாட்டின் கல்வித்துறையை இருட்டுக்குள் தள்ளிவிடுவதற்கு முயற்சிக்கும் கல்வியமைச்சர் கல்வியமைச்சர் பதவியிலிருந்து உடனடியான இராஜினாமா செய்யவேண்டும என்றார்.
இதேவேளை கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும் என பல்வேறு ஆசிரிய சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com