Tuesday, December 4, 2012

எரிகாயங்களுக்குள்ளான வயோதிபர் மாது மரணம்

எரிகாயங்களுககுள்ளான வயோதிப மாதொருவர் சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் திருநெல்வேலியில் இடம்பெற்றுள்ளது. இதில் அரசடி ஒழுங்கையைச் சேர்ந்த க.சின்னம்மா வயது 84 என்ற மூதாட்டியே மரணமானவராவார்.

இவர் நேற்று முன்தினம் இரவு படுகைக்கு செல்லும் போது விளக்கினை அணைக்க முயன்றபோது தீபிடித்து எரிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆயினும் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com