Thursday, December 6, 2012

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கைக் கடற்பகுதிக்குள்ளாக அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கை கடற்பகுதிக்குள்ளாக அத்துமீறி நுழைந்து இந்திய கடற்றொழிலாளர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோதக் கடற்றொழிலைக்கட்டுப்படுத்தக் கோரியே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 11 மணி முதல் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 24 கடற்றொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த 2000 ஆயிரத்திற்கும் அதிகமான கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து அரச அதிபருக்கு மகஜர் ஒன்றையும் வழங்கினார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com