Friday, December 21, 2012

பிரதம நீதியரசர் அரசியலுக்கு வந்தால் உதவ தயார்- சரத் பொன்சேகா

பிரதம நீதியரசர் அரசியலுக்கு வருவாராயின் அதுவும் யாரும் கொடுத்த கயிறை விழுங்கியதாகாது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை தீவிர அரசியலில் ஈடுபடும்படியும் அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் அவருக்கு உதவ தான் விரும்புவதாகவும் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமாக சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார்.

பராளுமன்ற குற்றப் பிரேரணை தொடர்பில் பல்வேறு அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்துவரும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபட்டதையிட்டு எனக்கு மனவருத்தம் எதுவுமில்லை ,நான் தான் யாரும் கொடுத்த கயிறை விழுங்கவில்லை .

நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக இப்போதும் கருதுகிறேன் அதனால், அரசியலுக்கு வந்ததையிட்டு தான் மனவருத்தப்படவில்லை.

'எனது வெற்றியை யாரோ ஒருவர் தட்டிப் பறித்ததாக நான் இப்போதும் நம்புகின்றேன்' என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com