Tuesday, December 18, 2012

950,000 ஆவது சுற்றுலாப்பயணி இலங்கையில்!

2012 ஆண்டு டிசம்பர்மாதம் 18ஆம் திகதி காலை 8.25 மணி வரை 950,000ஆவது சுற்றுலாப்பயணி இலங்கையை வந்தடைந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளதுடன் இந்த அண்டு முடிவடைவதற்கு இன்னும் 13 தினங்கள் மீதம் எஞ்சியுள்ள நிலையில் இன்னு அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் வருவார்கள் என எதி்பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறையின் 5 ஆண்டுகளுக்கான சுற்றுலா திட்டத்தின் அடிப்படையில் இந்த இலக்கு இவ்வருட நிறைவில் எய்தப்படவேண்டும் என திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அதன்படி அந்த இலக்கை எட்டியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக சுற்றுலாத்துறை கிடைத்த தகவல்களுக்கு அடிப்படையில், கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 80,379 சுற்றுலாப்பயணிகள் இலங்கையை வந்தடைந்திருந்தனர். இதன் மூலம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 774,151 ஆக அதிகரித்திருந்தது.இது 2011ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் இலக்கான 800,000 கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி இலங்கை எட்டியிருந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com