Monday, December 17, 2012

சீரற்ற காலை நிலையினால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இழந்த 50 மாணவர்கள்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ் நிலையினால் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் 50 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பமவ் மாத்தளை, கூம்பியங்கஹாவெல பரீட்சை மத்திய நிலையத்தைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை ஏற்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற க.பொ.த சாதாரண தர கணிதப் பாடப் பரீட்சை தேவையான வினாப்பத்திரங்கள் உலங்குவானுர்தி மூலம் அனுப்பட்டாமையினாலேயே இவர்களுக்கு பரீட்சைக்கு தோற்ற முடியவில்லை என்று வலய கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ள பரீட்சைக்கான வினாத்தாள்களை கடற்படையினரின் உதவியுடன் படகுமூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com