Wednesday, December 19, 2012

கடலுக்கு சென்ற மீனவர்கள் 5 பேர் காணாமல் போயுள்ளனர்?

மீன்பிடிப்பதற்காக கடந்த 16ஆம் திகதி கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஐவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என சிலாபம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. பங்கதெனியாவைச் சேர்ந்த மூன்று மீனவர்களும் சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். .

காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் செய்த முறைப்பாடு தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com