சிரியாவிற்கு எதிராக களமிறக்கப்பட்ட ஜேர்மன் படைகள்- 400 ஏவுகணைகளும் அனுப்பி வைப்பு
.
சிரியாப் படைகளின் தாக்குதலில் இருந்து துருக்கியை பாதுகாக்க ஜேர்மன் இராணுவம் எல்லைப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இத்தாக்குதலில் சில நேரங்களில் சிரியாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள துருக்கி நகரங்களும் பாதிக்கப்படுகிறன.எனவே துருக்கியை பாதுகாக்க நேட்டோவின் அங்கீகாரத்துடன் தனது 400 ஏவுகணைகளை அனுப்ப ஜேர்மனி முடிவு செய்துள்ளது என ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் தாமஸ் டி மெய்ஜியர், தமது படைகள் துருக்கியின் பாதுகாப்புக்கு உதவும் என்றார்.
மேலும் வெளிவிவகாரத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரையிலும் துருக்கி தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் எல்லைப்புற பகுதிகளை சிரியா மிரட்டி வருகின்றது. எனவே தான் அமெரிக்கா, நெதர்லாந்துடன் இணைந்து ஜேர்மனியும் துருக்கியை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment