Wednesday, December 19, 2012

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இடப்பெயர்வு

நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரையில் 9பேர் உயிரிழந்துள்ளதுடன் 3,021பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் சுமார் 735 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளம் மற்றும் மழை காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் 17 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்; பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை இரவு சேவையில் ஈடுபடவிருந்த சகல இரவு தபால் சேவை ரயில்களும் இரத்துச்செய்யப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளது.

மலையகம் மற்றும் வடக்கு ரயில் தண்டவாளங்கள் மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்றிரவு சேவையில் ஈடுபடுத்தப்படவிருந்த சகல இரவு தபால் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அச்சபை அறிவித்துள்ளது



.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com