Tuesday, December 4, 2012

தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறைப்பிடிப்பு!!

தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வேதாரண்யத்திற்கு கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.தற்போது அவர்கள் இலங்கை திருகோணமலை துறை முகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில், நாகை அக்கரை பேட்டை மீனவர்கள் 9 பேரும், காரைக்காலை சேர்ந்த மீனவர்களும் அடங்குவர்.

இக்கைது சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் கோசல வர்ணகுலசூரிய, இலங்கை கடற்பரப்புக்குள் குறித்த மீனவர்கள் அத்து மீறி நுழைந்ததாலேயே கைது செய்யப்பட்டதாகவும், மீனவர்கள் சென்ற 5 மீன் பிடி படகுகளையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com