Friday, December 7, 2012

மாத்தளை வைத்தியசாலையில் 33 மண்டை ஓடுகள் மீட்பு- விசாரணை குற்றத்தடுப்பு பொலிஸிடம்

மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து இதுவரையில் 33 மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளதோடு இவ்விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாத்தளை வைத்தியசாலையின் உயிரியல் வாயுப் பிரிவுக்காக அத்திவாரக் கிடங்கு தோண்டும் நடவடிக்கை கடந்த மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரையில் 33 மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து அந்தப் பகுதியில்; மேலும் அகழ்வு வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மேலும் இப்பகுதியில் எலும்புக் கூடுகள் மீட்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com