Tuesday, December 25, 2012

திருகோணமலைக் கடலில் கைது செய்யபட்ட இந்திய மீனவர்கள் 27 பேரும் விடுதலை

இலங்கை கடற்பகுதிக்குள்ளாக அத்துமீறி நுழைந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 27 பேரையும் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதவான் அஸ்ஹர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள்அனைவரும் நேற்றைய தினம் கடற்படையினரால் திருகோணமலைக்கு அண்மித்த கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 3 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர்களை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து அவர்களை விடுவிக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்

.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com