Saturday, December 1, 2012

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளோடு 14 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் !

அதிபர் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 14 சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி சுகயீன போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 14 சங்கங்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்ட, அதிபர் ஆசிரியர்களின் சம்பள திட்டத்திற்கு அமைவாக நிலுவையுடனான சம்பளத்தினை உடன் வழங்கு. அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கு, நிலுவைச் சம்பளம், இடர்கடன், வீடமைப்புக் கடன் முதலான அதிபர், ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய், உள்ளிட்ட கோரிகைகளும்,

மொத்த தேசிய உற்பத்தியின் 6 வீதத்தினை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இலசவ கல்விக்கான பாதுகாப்பினை உறுதிசெய், கல்வித்துறையை அரசியல் மயப்படுத்துவதை உடன் நிறுத்து, ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்து, போன்ற கோக்ரிக்கைகள் முன்வைத்தே இந்த சுகயீன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com