Thursday, December 6, 2012

பஸ் பள்ளத்தில் பாய்ந்தது ஒருவர் பலி 12 பேர் காயம்- திருமண வீட்டிற்கு சென்று வரும் போது அனர்த்தம்

திருமண வீட்டிற்குச் சென்று திரும்பிய பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வில்கமுவ, எலவனாகந்த பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார் என்றும் காயமடைந்தவர்கள் வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com