Tuesday, December 25, 2012

12 மணி நேரத்தில் 382 விபத்துக்கள்!

கடந்த 12 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 382 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இவற்றில் ஒரு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

கொழும்பு, ரொஸ்மிட் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற விபத்துச் சம்பவத்தில் அமிலா விஜேசிங்க மெண்டிஸ் என்ற ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளதுடன அவர் பயணித்த கெப் ரக வாகனம், கட்டுப்பாட்டை இளந்து மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, விபத்துச் சம்பவங்களில் காயமடைந்தவர்கள் ராகமை, களுபோவில மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தரப்பு மேலும் தெரிவிக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com