Wednesday, November 28, 2012

யாழ்.பல்கலைகயில் ஆர்ப்பாட்டம் மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி-பலர் வைத்தியசாலையில்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டமென்றில் ஏற்பட்ட கலகம் கலவராமாக மாறியதோடு மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடாத்தியுள்ளனர்.மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க கூடாது என்று ஏற்கனவே பொலிஸார் தெரிவித்து வந்த நிiலியல் ஒரு சில அரசியற்கட்சிகளின் பின்புறத்தோடு சில மாணவர்கள் மாவீரர் தினத்தை பல்கலையில் கொண்டாடினார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவீரர் தின நிகழ்வுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் கடுப்படைந்த மாணவர்கள் சில இன்று ஆர்ப்பாட்டம் என்றை நடாத்தினார்கள்.

இதன்போது மாணவர்களை கலைந்து போகுமாறு பொலிஸார் தெரிவித்த போதும் மாணவர்கள் கலைந்து போகமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் மாணவர்கள் மீது தடியடி நடாத்தினார்கள்.

பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் இன்று பெரும் பரப்பு ஏற்பட்டது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com