Tuesday, November 27, 2012

ஆமர்வீதி மரணத்திற்கு கடன் சுமையே காரணம்

ஆமர்வீதி – கிரேன்பாஸ் பிரதேசத்தில்இ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைஇ தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டது தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றதடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆமர்வீதி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இலக்கம் 87 கிரேன்பாஸ் வீதி கொழும்பு 14 என்ற முகவரியில் இருந்து இந்த சடலங்கள் நேற்று மாலை 6.10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர் இந்த மரணங்கள் சம்பவித்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக ஆமர்வீதி காவல்துறையின் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

மரணமானவர்களின் உறவினர் ஒருவர் குறித்த வீட்டுக்கு தொலை பேசி அழைப்பை மேற்கொண்டுள்ள நிலையில் அந்த அழைப்பிற்கு பதிலேதும் கிடைக்கபெறாத நிலையில் அவர் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதன்போதே இந்த சம்பவம் தொடர்பில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

38 வயதுடைய சிவலிங்கம் ஸ்ரீகாந்தன் 24 வயதுடைய கோகிலவாணி மற்றும் ஸ்ரீகாந்தன்; சர்வேஸ் என்ற 2 வயது ஆண் குழந்தை ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

சடலங்களுக்கு அருகில் கடிதம் ஒன்று கணப்பட்டதாகவும் அதில் கடன் சுமை காரணமாகவே தாங்கள் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினம் புதுக்கடை நீதவான் முன்னிலையில் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்று பிரேத பிரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஆமர்வீதி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com