Monday, November 26, 2012

தென் ஆபிரிக்காவில் கொள்ளையர்கள் 7 பேர் சுட்டுக்கொலை

தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் அருகே தனியார் பணம் பரிவர்த்தனை கம்பெனி செயல்படுகிறது. இதன் அலுவலகத்தில் ஒரு கும்பல் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றன.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 7 கொள்ளையர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் காயம் அடைந்த 9 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். கொள்ளையர்கள் வந்த 11 வாகனங்கள், 4 துப்பாக்கிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com