Monday, November 19, 2012

இந்திய அகதி முகாமிலிருந்த 15 இலங்கையார் தப்பியோட்டம்?

இந்தியாவிலுள்ள போகநல்லூர் அகதி முகாமிலிருந்து 15 இலங்கை அகதிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல்போயுள்ளதாக இந்தியாவின் பத்திரிக்கையென்று செய்தி வெளியிட்டுள்ளது. கடையநல்லூர் மாவட்டத்திற்கு அருகிலுள்ள போகநல்லூர் அகதி முகாமில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்.
சோதனை நடவடிக்கை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டபோதே முகாமிலிருந்து 139 இலங்கை அகதிகள் குடும்பங்களில் 15 பேர் காணாமல்போயுள்ளதாக வருவாய்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இவர்கள் காணாமல்போனமை தொடர்பில் சொக்கம்பட்டி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியக் குடியுரிமை மற்றும் சிறந்த வாழ்க்கைத்தரத்திற்காக இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக பயணிக்கின்றனர். இந்த நிலையில் போகநல்லூர் அகதி முகாமிலிருந்து காணாமல்போன இந்த 15 அகதிகளும் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com