Monday, November 19, 2012

த.தே.கூ 13 திருத்த சட்டம் தொடர்பில் பொய்பிரச்சாரம்

அரசியல் தீர்வு தொடர்பாகவும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.இந்தியாவிற்கும் உலக சமூகத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யுரைத்து வருகின்றது.

முதலில் 13ம் திருத்தச் சட்டத்தை வேண்டுமெனக் கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது கடுமையாக எதிர்த்து வருகின்றது.

நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே. 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மைகளை அளிக்க முடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இன்று துரித அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது எனஅவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com