Wednesday, November 7, 2012

நிறுவை அளவை உபகரணங்களை பயன்படுத்தி மோசடியில் 10 பேர் கைது

பண்டாரவளை நகரில் நிறுவை அளவை உபகரணங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்டு வந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அளவை அலகு பிரிவு மற்றும் சேவைகள் திணைக்கள காரியாலயத்தின் பதுளை கிளையினர், கடந்தவாரம் மேற் கொண்டசுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக சட்டநடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் தராசுக்கு முத்திரை இடாமை பயன்படுத்திய மூவர், மோசடியாக நகை அடகு பிடித்த வர்த்தகர் ஒருவர், திரவ அளவைகளுக்காக போத்தல்களை பயன்படுத்தியவர்களும் இவர்களுள்; அடங்குகின்றனர்.

இதேவேளை, ஹெரண பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர், அலுத்கம கலுவாமோதர விஹாரைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com