Monday, October 8, 2012

பிரபல பாடகியின் மகள் தன்னை தானே சுட்டு தற்கொலை

பிரபல ஹிந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லேயின் மகள், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வருகிறது. பாடகி ஆஷா போன்ஸ்லே, மராத்திய கலாசார விருதுகள் விழாவில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்றுள்ள சமயத்தில், அவரது மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆஷா போன்ஸ்லேயின் மகள் வர்ஷா பத்திரிகையாளராக பணியாற்றியவர். அவர் விளையாட்டுத் துறை பத்திரிகையாளரான ஹேமந்த்தை திருமணம் செய்திருந்தார். பின்னர் இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டனர். அதன்பின் வர்ஷா சில தடவைகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென வர்ஷாவின் வீட்டில் துப்பாக்கிச் சப்தம் கேட்டதாக, அண்டை வீட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது வர்ஷா, தலையில் சுடப்பட்ட நிலையில் இறந்து காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com