Sunday, October 21, 2012

பெண் பொலிஸ் அதிகாரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற இராணுவ வீரர் கைது

பெண் பொலிஸ் அதிகாரியை ஒருவih பஸ்ஸில் வைத்து பாலியல் வல்லுற வுக்கு உட்படுத்த முயன்ற இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள் ளார். சம்பவம் தொடர்பாக தெரியவ ருவதாவது.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்ட சிறுமியொருத்தியை மருத்துவ பரிசோதனைக்கு அநுராதபுரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு கஹட்ட கஸ்திலிய பொலிஸ் நிலையத்துக்கு சீருடையுடன் திரும்பிக் கொண்டிருந்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மீது மது போதையிலிருந்த இராணுவ வீரரொருவர் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்றுள்ளார் என தெரிவிக்கப் படுகின்றது.

குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இம் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் உத்தர விட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com