Wednesday, October 10, 2012

பொலிஸ் அத்தியட்சகரின் கன்னத்தை பதம் பார்த்த பிரதி பொலிஸ் மா அதிபர்

பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தாக்குதலுக்கு பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் இலக்கான சம்பவம் கடந்த ஞாயிறு கிழமை கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. சம் பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போது, பிரதி பொலிஸ்மா அதிபர் தனக்கு தெரிந்த நண்பர்கள் சிலரை மைதானத் துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

எனினும் கடமையிலிருந்து பொலிஸ் அத்தியட்சர் இதனைத் தடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த பிரதி பொலிஸ்மா அதிபர் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் குறித்த பொலிஸ் அத்தியட்சருக்குக் கன்னத்தில் அறைந் துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சர் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com