Wednesday, October 31, 2012

இஸ்ரேலை மிரட்ட சூடான் நாட்டு துறைமுகத்தில் ஈரான் போர் கப்பல்கள் முகாம்

சூடான் நாட்டில் கார்தோம் நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலையில் சமீபத்தில் 2 தடவை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வதாக கருதி இந்த தொழிற்சாலை மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்கியதாக சூடான் குற்றம்சாட்டியது. இதற்கு இஸ்ரேல் கருத்துதெரிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி பாராக்கிடம் இது பற்றி ஒரு செய்தி நிறுவனம் கருத்து கேட்டபோது அவர், 'இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை' என கூறிவிட்டார்.

இதற்கிடையே சூடானின் நட்பு நாடான ஈரான் 2 போர் கப்பல்களை அனுப்பி இருக்கிறது. இந்த கப்பல்கள் சூடானின் செங்கடல் பகுதி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் தீவிரவாத செயல், கடற்கொள்ளையர்களை ஒடுக்கவே போர் கப்பல்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், 2 நாட்டு தளபதிகளும் சந்தித்து பேச இருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் இஸ்ரேலை மிரட்டவே ஈரான்-சூடான் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com