Saturday, October 13, 2012

ஒரே அணியாக நின்று தழிழர் பிரச்சினையை தீர்க்க போகின்றாராம் சுஷ்மா அம்மையார்

புதுடில்லி சென்றுள்ள த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை இந்திய எதிர்க்கட்சித் தலைவியை சந்தித்துள்ளனர். இதன் போது இலங்கைத் தமிழ் மக்களை இந்தியா கைவிட மாட்டாது என சுஷ்மா சுவராஜ் அம்மையார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியா ஒரே அணியாக நின்று தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க உதவும் என்றும், தமிழர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நான் சந்தித்தபோது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது என்றும், ஒரே நாளில் பிரச்சினையை தீர்ப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதென தெரிவித்திருந்தேன், ஆனாலும், அத்தகைய சந்தர்ப்பத்தை அவர் நடைமுறைப்படுத்தாதது எனக்கு கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com