Monday, October 22, 2012

அல்-கொய்தாவின் 2-ம் கட்ட தலைவர் ஏமனில் உயிருடன் இருக்கிறார்: ஆடியோ தகவலால் பரபரப்பு

கடந்த மாதம் அமெரிக்க விமானப்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட, அல்-கொய்தா இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர் சயீத் அல்-ஷிஹிரி ஏமனில் உயிருடன் இருப்பதாக வெளியான ஆடியோ தகவலால் தற்போது திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி வெளியாகியுள்ள ஆடியோ தகவலில் பேசும் இளைஞர் தன்னை சயீத் அல்-ஷிஹிரி என அறிமுகம் செய்துகொண்டு, ‘அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றதை மறைப்பதற்காக, என்னைக் கொன்றதாக அமெரிக்கா வதந்தி கிளப்பியது’ எனக் கூறியுள்ளார். எனினும், இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அல்-கொய்தாவின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆடியோ தீவிரவாத இணையதளங்களில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அடையாளம் தெரியாத நபரால் வெளியிடப்பட்ட இத்தகவலை ஏமன் அதிகாரிகள் மறுத்துள்ளனர். அல்-ஷிஹிரியும் அவருடன் பயணம் செய்த 6 பேரும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதை ஏமன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com