Tuesday, September 11, 2012

சட்டவிரோத குடியேற்ற காரர்களை தடுக்க அவுஸ்த்திரேலியா நடவடிக்கை எடுக்கவில்லை.

இலங்கையர்கள் சட்ட முரணாக அவுஸ்த்திரேலியாவை நோக்கிச் செல்வதை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் போது, சட்ட விரோதமாக அவுஸ்த்திரேலியா செல்வோரை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, அவுஸ்த்திரேலிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று கடற்படைத் தளாதி அட்மிரல் சோமதிலக்க திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

அவுஸ்த்திரேலிய அரசாங்கம் அவ்வாறு குடிவரும் நாடுகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றதே தவிர, சட்டமுரணாக குடியேறுபவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாதது கவலைக்குரியது என தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாக குடிபெயர்பவர்களைத் தடுக்க இலங்கை கோடிக்கணக்கான ரூபாவை செலவிடுகிறது எனவும் இதுவரையில் இந்த வியாபாரம் செய்யும் பலரைக் கைது செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com