Saturday, September 15, 2012

காத்தான்குடியில் மேலுமோர் பள்ளிவாயலுக்கு அடிக்கல்நாட்டு.

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் இரண்டு கோடி ரூபா செலவில் தகரத்தில் அமைந்துள்ள காத்தான்குடி பாலமுனை மஸ்ஜிதுல் அம்மார் மற்றும் குர்ஆன் மத்ரஸாவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெயக் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

பொதுச் செயலாளர் எ. எல். கலிலுர்ரஹ்மான், பள்ளிவாசல் நிர்வாகிகள், காத்தான்குடி இஸ்லாமிய நிலைய உலமாக்கள் மற்றும் காத்தான்குடி அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஞாபகார்த்தமாக மரக் கன்றும் நடும் நிகழ்வும் நடைபெற்றன.

இக்பால் அலி.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com