Wednesday, September 5, 2012

மத்திய மாகாண முதலமைச்சரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிலிமத்தலாவையில் பாடசாலை ஒன்றில் புதிதாக மாணவர்களை சேர்க்க மத்திய மாகாண முதலமைச்சர் லஞ்சம் பெற்றுள்ளார் என குற்றம் சுமத்தியே இவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய மத்திய மாகாண முதலமைச்சர் மத்திய மாகாண கல்வி அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை நீதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com