Friday, September 14, 2012

இலங்கை தொடர்பான தனது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது - வில்லியம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு தான் விஜயம் செய்ததன் பின்னர், இலங்கை தொடர்பான தனது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது பொதுநலவாய நாடாளுமன்ற சங்க த்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வில்லியம் எவ். ஷிஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாததைப் போன்று, சர்வதேச ஊடகங்கள் சித்தரித்தன. ஆனால் பெருமளவிலான வேலைகள் செய்யப்பட்டுள்ளன எனவும், அழிவின் வடுக்களை இப்போதும் காண முடிந்த போதிலும், மக்களின் பொருளாதாரத்தை பெருமளவான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலாநிதி வில்லியம் எவ். ஷிஜா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அனுபவத்தை அங்கத்துவ நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் தயாராகவுள்ளது என அவர் தெரிவித்தார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்திப்பதற்கும் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் குழுவினர் வடபகுதிக்கு விஜயம் செய்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com