Thursday, September 27, 2012

குடியிருக்க இடம் கொடுக்காததால் இலங்கைத் தம்பதியினர் மீது தாக்குதல் - துபாயில் சம்பவம்

துபாயில் வசிக்கும் இலங்கைத் தம்பதியரை மனிதத் தன்மையற்ற முறையில் தாக்கிய குற்றத்திற்காக மற்றொரு இலங்கையரை துபாய் பொலிஸார் குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொழிலின் நிமித்தம் ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த நபர் துபாய் சென்றுள்ளார். அத்துடன் அந்த நபர் குறித்த தம்பதியினரின் வீட்டில் பலவந்தமாக தங்குவதற்கு முயன்றிருக்கிறார். அதற்கு அந்த தம்பதியினர் சம்மதிக்காததால் அவர்களைத் தாக்கியிருக்கிறார் என்று துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com