Monday, September 3, 2012

படகுக்காரர்களை அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்- அவுஸ்திரேலிய எதிர்கட்சி

சட்ட விரோதமாக படகு மூலம் அவுஸ்த்திரேலியா வரும் இலங்கையர்களை அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதிக்கவிடாது உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்த்திரேலியாவுக்கு வரும்போது கடலில் வைத்து இடைமறிக்கப்படும் சட்டவிரோத குடியேற்ற காரர்களின் படகுகளை, இலங்கைகுத் திருப்பி அனுப்புவதற்கு சமஷ்டி அரசாங்கள் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவுஸ்த்திரேலிய அரசாங்கத்தின் எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை கோகோஸ் தீவுகளுக்கு வடமேற்கே கடலில் 81 இலங்கையர்களை இடைமறித்தையடுத்தே இந்த கோரிக்கை எழுந்துள்ளது. இதனைத் தடுக்க இலங்கை குறிப்பிடத்தக்க முயற்சி எடுத்தாலும், அவர்கள் எப்படியோ வந்து விடுகிறார்கள் என்றும், இவர்களை அவுஸ்த்திரேலிய மண்ணில் கால் பதிக்கவிடாது, உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தின எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜூலி பிசப் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 25 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த உண்ணாட்டு யுத்தம் மே 2009 ல் முடிந்து விட்டது என்றும், கடந்த ஆகஸ்டு 22 ம் திகதிக்குப் பின்னர் மாத்திரம் 10 படகுகளில் 650 இலங்கையர்கள் படகுகளில் வந்து பிடிபட்டிருக்கிறார்கள் என்றும், அவுஸ்திரேலிய உண்ணாட்டு அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com