Saturday, September 29, 2012

பிரதேச சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல்! விஜயசேகராவின் கைவரிசை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சிவில் பாதுகாப்பு படையின் பணிப் பாளருமான, ரியர் அட்மிரல் சரத் வீரசேகராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த தெகியத்தகண்டி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கூட்டத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால் ஒரு பிரதேச சபை உறுப்பினர் தெகியத்த கண்டி ஆதார மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசாருக்கு அறிவித்தும் தாக்குதல் நடாத்திய சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com