Monday, September 17, 2012

மேர்வின் சில்வாவின் புதல்வரான மாலக்க சில்வா கொம்பனித் தெரு பொலிஸில் சரண்

மேர்வின் சில்வாவின் புதல்வரான மாலக்க சில்வா, மற்றும் அவரது சகாவான ரெஹாண் விஜேரத்ன உள்ளிட்ட குழுவினர் இன்று காலை கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மாலக்க சில்வா, இராணுவ மேஜர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தற்போது குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com