Tuesday, September 11, 2012

பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பல பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை !

காணாமல் போன இருவரின் குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பித்த முறைப்பாடு களின் பேரில், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பல பொலிஸ் அதிகாரி களுக்கு மேன்முறையீட்டு நிதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

பயாகமை மற்றும் மட்டக்குளி ஆகிய இடங்களில் இருந்து, கடந்த நவம்பரில் காணாமல் போன இருவரைத் தேடுவதற்கு அரசாங்கத்திடம் உதவி பெறும் முயற்சி தோற்றதால், குறித்த காணாமல் பேனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள் என்று இளம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

அத்துடன், காணாமல் போனவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு மட்டக்குளி பொலிஸாரை தாக்கிய குழுவைச் சேர்ந்தவர் என்றும், மூன்று பேருக்கான முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், ஒரு சில திருத்தங்கள் செய்யவேண்டியிருப்பதால் ஒரு முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை இச்சங்க சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com