Monday, September 10, 2012

3 ஆவது அரசியல் கட்சி புஸ்வானமாகியுள்ளது

அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை பிரமாண்டமான முறையில் நடத்தும், மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கை களை, நாட்டு மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டதையே இத்தேர்தல் முடிவுகள் மிகத்தெளிவாகச் சுட்டிகாட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி, நடந்து முடிந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. இலங்கையின் மூன்றாவது பிரதான அரசியல் கடசியாக கருதப்பட்ட ஜே. வி. பியை நாட்டு மக்கள் நிராகரித்து விட்டதையே இத்தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகின்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மாகாண சபைகளுக்குமான தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 16 ஆயிரத்து 66 வாக்குகளைப் பெற்றே ஜே.வி.பி. ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com