Monday, August 6, 2012

தேர்தலைக் கவனிக்க பன்னாட்டுக் கண்காணிப்பாளர் அவசியமில்லை– தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தலைக் கவனிக்க பன்னாட்டுக் கண்காணிப்பாளர்ளை பணியில் ஈடுபடுத்த வேண்டியதில்லை என, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது. அதற்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம் என கோரியிருந்தனர்.

எனினும், தற்போதைக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவேண்டிய அவசியம் எதுவும் எழவில்லை எனவும், இருப்பினும் தேவை ஏற்பட்டால் சார்க் பிராந்திய வலய வெளிநாட்டு கண்காணிப்பாளர்களைக் கடமையில் ஈடுபடுத்த முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com