Wednesday, August 29, 2012

பலிபூஜை வேண்டுமானால் எனது கழுத்தை வெட்டுங்கள் – மேர்வின்

கபிலவஸ்து புனித சின்னம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சமயத்தில் யாரும் மிருக பலி கொடுப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றும், அப்படி பலி கொடுக்க வேண்டும் என்றால் முதலில் எனது கழுத்தை வெட்டுங்கள் என்று, அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யார் எதிர்த்தாலும் மிருக பலியிடல் நடைபெறும் என்று முன்னேஸ்வரம் காளி கோயில் பூசகர் கூறியதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னேஸ்வரம் காளிகோயில் பூஜையில் யாரும் பிரச்சினைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment