Thursday, August 16, 2012

இரத்தம் குடிப்பது பேய், தெய்வம் அல்ல – மேர்வின் சில்வா.

எதிரிகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பவர்கள் தெய்வங்கள் அல்ல, பேய்கள் என்றும்,பேய்களோடு எனக்கு சம்பந்தம் கிடையாது என அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் களனி ரஜமகாவிகாரையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எனது வாழ்க்கையில் நான் அறிய உயிர்ப்பலி கொடுப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என்றும், நான் பெற்றுள்ள பௌத்த சக்தி, தெய்வங்களிடம் பெற்ற வரம், என்னை பசுமையான தோட்டமாக்கியிருக்கின்றது. இதில் யாரும் வந்து மேயலாம், இலைதழைகளை உண்ணலாம். ஆனால் தோட்டத்தை அழிக்க முடியாது. நான் இறந்தால் மட்டுமே அது நடக்கும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com