Friday, August 31, 2012

இந்தியா இலங்கையின் பரம விரோதி, சீனாவுடனான உறவை வலுவாக்குவீர். குணதாச

இந்தியா, இலங்கையின் பரம விரோதி என்றும், அதனால் இலங்கை சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று, தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 30ம் திகதி இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் இந்திய வாயில் புத்தபோதனையும் வயிற்றில் விலங்கிறைச்சியினைக் கொண்டுள்ளதாகவும் அவர் விமர்சிக்கின்றார்.

மேலும், இலங்கை தொடர்பில் இந்தியா இரட்டை வேடம் போடுகின்றது என்றும், ஒரு பக்கத்தில் கலிலவஸ்துவை இலங்கைகு அனுப்பும் இந்தியா, மறுபக்கத்தில் இலங்கையில் பௌத்த தலங்களைத் தாக்க ஏவுகணைகளை ஆயத்தமாக வைத்துள்ளது என்றும், இது வாயில் பௌத்தமும் வயிற்றில் இறைச்சியும் என்பதற்கு ஒப்பாக இருக்கிறது எனவும், அதனால் இந்தியாவுக்குப் பயப்படாமல் சீனாவோடு அதிகமாக உறவைப் பலப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment