Friday, August 31, 2012

சிரிகோத்தா முன் உண்ணாவிரதம் இருக்க போகின்றாராம் பந்துல

ஒரு சிலரின் விருப்பத்துக்காக பாராளு மன்ற உறுப்பினர் தயாசிரியை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நீக்கினால், தான் ஆயிரக்கணக்கான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுடன் வந்து, சிரிகொத் தாவின் முன்பாக உண்ணாவிரதம் இருப்பேன் எனதெற்கு மாகாண சபை உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்குத் தேவையான நபர்களுக்கு இடம் கொடுக்காது நாளாந்தம் நலிவுறுகின்றது என்றும், சரத் பொன்சேகா, கரு ஜயசூரியா, சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment