Sunday, August 26, 2012

சந்திரனில் காலடியெடுத்து வைத்த முதலாவது விஞ்ஞானியான நீல் ஆம்ஸ்ட்ரோங் காலமானார்.

82 வயதான நீல் ஆம்ஸ்ட்ரோங், நேற்று, மரணமடைந்ததாக, அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி அப்பலோ-11 வானூர்தி ஊடாக, சந்திர மண்டலத்தில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ரோங், 20வது நூற்றாண்டில், உலக விண்வெளி ஆய்வு செயற்பாடுகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தினார்.

இவருடன் எட்வின் ஹொல்ரிங்கும் இணைந்திருந்தார். 1930 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஒஹியோ மாநிலத்தில் பிறந்த நீல் ஆம்ஸ்ட்ரோங், தனது 16 வயது வயதில் விமானி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டார். விண்வெளி பொறியியல் தொழில்நுட்பம் தொடர்பாக பல்கலைக்கழக பட்டத்தை பெற்றதன் பின்னர் இவர், அமெரிக்க கடற்படையில் இணைந்து கொண்டார். அதனை தொடர்ந்து நாஸா நிறுவனத்துடன் இணைந்து, விண்வெளி ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டார். 1960 ஆம் ஆண்டுகளில், இவர் இது தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். சந்திரனில் காலடிபதித்து, உலகின் கௌரவத்தை பெற்ற நீல் ஆம்ஸ்ட்ரோங், விண்வெளியில் மற்றொரு புரட்சிகர ஆய்வினை மேற்கொள்வார் என, உலக சமூகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது

1 comments :

Anonymous ,  August 27, 2012 at 4:32 PM  

நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் வரலாற்று சிறப்பு மிக்கவர் சங்கீதம் 116:15 கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது அவர் சந்திரனில் கால் வைத்த போது அவர் நினைவி கூர்ந்த வேத வார்த்தை (சங்கீதம் 8 : 3 ,4 ,5 )3. உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.5. நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். மேலும் அவருடை face book ல் அவருடைய நண்பருக்கு பகிர்ந்துகொண்ட சில வரிகள் ...23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களா இருக்கிறோம் என கூறிவிட்டு 23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.11. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; 10. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். Have you given your life to Jesus Christ? If not, would you do so now? நீஎங்கள் உங்கள் வாழ்கையை இயேசு கிறிஸ்துவுக்கு கொடுத்து இருக்கிறிர்களா ? இல்லையெனில் இப்பொழுதே அதை செய்யுங்கள் ....மேலும் நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றி அவர் நண்பர் கூறும்போது அவர் எல்லாவற்றிலும் சிறந்த மனிதர் .....ஒரு நடந்த உண்மை சம்பவம் 22 வயது பெண் சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது பலர் ஜெபிக்கவும் செய்தனர் நான்கு மாதம் ஆகியும் குணமாகவில்லை இவள் என்று சுகவீனம் ஆனாளோ அன்றிலிருந்து நான் இவள் குணமடைய தேவனிடம் தொடர்ந்து ஜெபித்து கொண்டு வந்தேன் ஒரு நாள் இரவு 11 மணி அளவில் தொலை பேசி அழைத்தது அதில் அந்த பெண் மறித்து போன செய்தி வந்தது எனக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது நான் தேவனை நோக்கி நீர் ஏன் அவளுக்கு சுகத்தை கொடுக்க கூடாது என் ஜெபத்திற்கு பதில் எங்கே இப்போது அந்த மகளுடைய ஆத்துமா எங்கே சென்று இருக்கிறது என்றும் எனக்கு கண்டிப்பாக பதில் தரவேண்டும் என்று ஒரு மணி நேரம் கெஞ்சினேன்.கலையில் எழுந்ததும் எந்த பதிலும் இல்லை நான் ஒவொரு நாளும் பரிசுத்த வேதத்தை தொடர்ச்சியாக படிப்பது வழக்கம் அன்று நான் வாசிக்கவேண்டிய வேத பகுதியை வாசிப்பதற்காக திருப்பினேன் அது ரோமர் 14 அதிகாரம் முழுவதும் அதிலே 7 ,8 9 வசனங்களில் 7. நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.8. நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.9. கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர் (உயிருள்ளவர் ) மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.ஏற்ற சமயத்தில் கொடுத்த வார்த்தை எனக்கு மகிழ்ச்சியை தந்தது இதிலிருந்து நாம் தெரிய வருகிறது என்ன வென்றால் அந்த மகள் வியாதி பட்டதையும் தேவன் அறிந்து இருந்தார் நான் அவளுக்காக தொடர்ந்து ஜெபித்ததையும் அவர் அறிந்திருந்தார் அவள் மரிக்கும் நாளையும் அவர் அறிந்து இருந்தார் ஆகவே எனக்கு ஏற்ற சமயத்தில் பரிசுத்த வேத வார்த்தை மூலமாகவே பதில் கொடுக்கவும் அறிந்து இருந்தார் அன்பு நேயர்களே எல்லா மனுஷருடை முடிவும் கரதருடைய கருத்தில்தான் இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டியது அவசியம் நீங்களும் வேதத்தை வாசியுங்கள் பதிலை பெற்று கொள்வீர்கள்... god bless you ....

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com