Wednesday, August 29, 2012

இத்தாலிய அழகுராணி இறுதிப் போட்டியில் இலங்கைப் பெண்.

ரோம் நகரத்தில் இலங்கையர்களான ரேமண்ட்ஸ் மற்றும் சந்தியாவுக்குப் பிறந்த 18 வயது நயோமி ஆண்டிபுதுகே இத்தாலியின் உலக அழகுராணிப் போட்டியில் பங்குபற்றும் இறுதி ஆறுபேருக்குள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

20 பேர்களில் இருந்து இந்த அறுவரும் தெரிவாகியிருக்கின்றார். இந்த 'மிஸ் இத்தாலி' இறுதிப் போட்டி அடுத்தமாதம் நடைபெறவிருக்கின்றது. இத்தாலியில் ஒரு வருடத்துக்கு மேல் வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கென இந்த இத்தாலியின் உலக அழகுராணி போட்டி புதிதாக ஆரம்பிக்கப்பட்டதாகும்.

தான் இத்தாலியில் பிறந்ததால் தனக்கு இதாலிய குடியுரிமை வேண்டும் என்று அவர் இத்தாலிய ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment